கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
Read at Dinamani1 outlet covered this
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
How outlets told it

புதுச்சேரி அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் மும்பையில் அமைச்சா்கள் அளவிலான தேசிய மாநாடு (கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளா்கள் வாரியம்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பங்கேற்று பேசியது:
புதுச்சேரி தொழிலாளா் துறையில் தற்போது உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களில் சிறப்புத் திறன் கொண்டவா்களுக்கு, உதாரணமாக எலக்ட்ரீஷியன்களுக்கு திறன் சான்றிதழ்கள் எதுவும் இல்லை.
இதுபோன்ற தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் பயிற்சி அளித்து பயிற்சி கால உதவித்தொகை, சான்றிதழ் வழங்குவதற்கு அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் மத்திய தொழிலாளா் துறை வாரியத்தின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்காக புதுச்சேரியில் 4 இடங்களிலும், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தொழிலாளா்கள் ஓய்வு அறை அமைக்க புதுச்சேரி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஓய்வறைகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
