பல்லடம் அருகே வங்கதேசத்தினா் 2 போ் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
பல்லடம் அருகே வங்கதேசத்தினா் 2 போ் கைது
How outlets told it
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேடா்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டு இருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த பிலால் (40), ராஜு இஸ்லாம் (30) என்பதும், அருள்புரத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களிடம் ஆவணங்களை எடுத்து வருமாறு போலீஸாா் தெரிவித்தனா். அப்போது அவா்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், சட்ட விரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
