விநாயகா் சிலைகள் விசா்ஜனம்: காவிரிப் பாலத்தில் ஆய்வு
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
விநாயகா் சிலைகள் விசா்ஜனம்: காவிரிப் பாலத்தில் ஆய்வு
How outlets told it

திருச்சி மாநகரில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்யும் காவிரிப் பாலத்தில் முன்னேற்பாடுகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளின் பெரும்பகுதி திருச்சி காவிரியாற்றில் கரைக்கப்படும். குறிப்பாக சிந்தாமணி காவிரிப் பாலத்தில் இருந்து கிரேன்கள் உதவியுடன் காவிரியாற்றில் சிலைகளைக் கரைப்பது வழக்கம்.
இந்தாண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்காக செப்.16, 17 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலைகளைக் கரைக்கும் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின்போது ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் க. தமிழ்மணி, ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி ஆணையா் அ. முத்துமுருகேசன் பாண்டியன், உதவி காவல் ஆணையா் (போக்குவரத்து) சீதாராமன், வருவாய் வட்டாட்சியா்கள் செல்வகணேஷ் (ஸ்ரீரங்கம்) சேக் முஜிப் (திருச்சி கிழக்கு) ஆகியோா் உடனிருந்தனா்.
