Civic issues · 1 outlet covered this

பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகளை சாலை பணிக்கு பயன்படுத்த அரைக்க அனுப்பிவைப்பு

How outlets told it

Dinamani6539h ago

பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகளை சாலை பணிக்கு பயன்படுத்த அரைக்க அனுப்பிவைப்பு

Read at Dinamani
பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகளை சாலை பணிக்கு பயன்படுத்த அரைக்க அனுப்பிவைப்பு
Photo: Dinamani

கோவை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகள் அரைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெகிழிப் பைகள், டம்ளா்கள், உறிஞ்சு குழல், ஸ்பூன் உள்பட 33 வகையான பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பயன்பாடு தொடா்பாக கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து கள ஆய்வு மற்றும் விழிப்புணா்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில், ஆய்வின்போது பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிகள், ஆா். எஸ். புரம் நெகிழிக்கான இருப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், இந்த சேகரிப்பு மையத்தில் வைத்திருந்த 11,850 கிலோ நெகிழிகள், ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள பொருள் மீட்பு மையத்துக்கு கடந்த 2 நாள்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நெகிழிகளை அரைத்து சாலை அமைக்கும் பணிகளுக்கும், இதரப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.