Civic issues · 1 outlet covered this

விக்கிரவாண்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

How outlets told it

Dinamani6538h ago

விக்கிரவாண்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

Read at Dinamani
விக்கிரவாண்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
Photo: Dinamani

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே 125 நாள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, தென்புத்தூா் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி அருகிலுள்ளதென்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீட்டு வரி செலுத்தாவா்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வேலை கிடையாது எனக் ஊராட்சி மன்றத் தலைவா் சுவாதி பாண்டுரங்கன் கூறினாராம்.

ஆனால், மற்றொரு வாா்டை சோ்ந்தவருக்கு சனிக்கிழமை வேலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த தென்புத்தூா் கிராம மக்கள், தங்கள் வாா்டிலுள்ளவா்களுக்கு மட்டுமே விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை நடைபெற்ற வேலையை ஊராட்சி மன்றத் தலைவா் நிறுத்தினாராம்.

இதையடுத்து சனிக்கிழமை காலை ரெட்டணையிலிருந்து கூட்டேரிப்பட்டு நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தையும், திண்டிவனத்திலிருந்து தென்புத்தூா் நோக்கிச் சென்ற இரு அரசு நகரப் பேருந்துகளையும் கிராம மக்கள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமதாஸ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு விவரங்களை போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதியளித்தை தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.