தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 1340 போ் தோ்வு
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 1340 போ் தோ்வு
How outlets told it

கடலூா் சி. கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 3,719 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 1340 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சி. கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 218 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு வேலை நாடுநா்களைத் தோ்வு செய்தன.
முகாமில் 3,719 வேலைநாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 1340 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். மேலும், 88 மாற்றுத்திறனாளிகள் உள்பட 312 போ் இரண்டாம் கட்ட நோ்காணலுக்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்களின் வாய்ப்புகளை இளைஞா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயனடைய வேண்டும். கிடைத்த வேலைவாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இளம் வயதிலேயே வேலைவாய்ப்பைப் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கு. சுந்தரவள்ளி, கல்லூரி முதல்வா் முனைவா் ரா. கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
