Crime and courts · 1 outlet covered this

கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 போ் கைது

How outlets told it

Dinamani652d ago

கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 போ் கைது

Read at Dinamani
கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 போ் கைது
Photo: Dinamani

திருப்பூரில் கஞ்சா, கஞ்சா சாக்லெட் வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கமேடு அருகே போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, 1.150 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (31), விஜயகாந்த் (38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அமித்குமாா் (19) என்ற இளைஞரிடம் சோதனை மேற்கொண்டபோது, 800 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அமித்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.