தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்
How outlets told it

Published on: 11 Sep 2026, 1:22 amசென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம். எல். ஏ. கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் முன்னிறுத்தி, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கியமான பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
