மர்ம நபர்களால் துணை நடிகர் வெட்டிப் படுகொலை - 4 பேர் கைது..!
Read at Polimer NewsCrime and courts · 1 outlet covered this
மர்ம நபர்களால் துணை நடிகர் வெட்டிப் படுகொலை - 4 பேர் கைது..!
How outlets told it

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் பிரதீப் ராஜ், மேற்கு மாட வீதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கந்து வட்டிப் பிரச்சனையில் தன் மீது பொய் வழக்குப் போட்டதுடன், தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்து மிரட்டியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மீது பிரதீப் ராஜ் புகார் கூறியிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டார். தன் மகன் மீது தப்பே இல்லை, தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரதீப் ராஜின் தாயார் டில்லி ராணி கதறினார். இந்த நிலையில் கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
