Accidents · 2 outlets covered this

மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

How outlets told it

Dinamani653d ago

மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

Read at Dinamani
Daily Thanthi9938h ago

ஒரு மாதத்துக்கு முன்பு பதிவு செய்த அரசு பஸ் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி

Read at Daily Thanthi
மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
Photo: Dinamani

பண்டாரா: மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை(செப்.11) சரக்கு லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டம் லக்னி தாலுகாவில் உள்ள மானேகான் மற்றும் பிம்பல்கான் பகுதிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிரோ எஸ்யூவி கார் ஒன்று ஈச்சர் சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று குழந்தைகள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 53 வழியாக நாக்பூருக்கு வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.