Crime and courts · 1 outlet covered this

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் பரிதாப உயிரிழப்பு

How outlets told it

The Hindu Tamil6540h ago

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் பரிதாப உயிரிழப்பு

Read at The Hindu Tamil
இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் பரிதாப உயிரிழப்பு
Photo: The Hindu Tamil

மதுரை: திண்​டுக்​கல் மாவட்​டம், வெள்​ளோடு கவின் நர்​சரியைச் சேர்ந்​தவர் ஜெபபாஸ்​டின். ராணுவத்​தில் பணிபுரிகிறார். இவருக்​கும், காமலாபுரம் சக்​கையா நாயக்​க​னூரைச் சேர்ந்த மரிய பென்​சி​யா​வுக்​கும் (26) இன்று (செப்​13) திரு​மணம் நடக்கவிருந்தது. இந்​நிலை​யில், நேற்று மதுரை​யில் நடந்த நர்​சிங் தேர்​வில் பங்​கேற்க பென்​சி​யா​வும் ஜெப பாஸ்​டினும் இருசக்கர வாக​னத்​தில் புறப்​பட்டனர். வாடிப்​பட்டி அருகே வந்த​போது, முன் சென்ற காரின் டயர் வெடித்​ததால் தாறு​மாறாக ஓடி இருசக்கர வாக​னத்​தில் மோதி​யது. இதில் இருவரும் தூக்கி வீசப்​பட்​டு, சம்பவ இடத்​திலேயே மரிய பென்​சியா உயி​ரிழந்​தார். ஜெபபாஸ்​டின் மதுரை அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்​பட்​டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.