உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு விவகாரம்: பிரதமா் மோடி தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Read at Dinamani1 outlet covered this
உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு விவகாரம்: பிரதமா் மோடி தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதமிழ்நாடுஉயா் சிறப்பு மருத்துவப் படிப்பு விவகாரம்: பிரதமா் மோடி தலையிட வேண்டும் - மு. க. ஸ்டாலின்உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு) இடங்களை நிரப்புவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்கும் விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மு. க. ஸ்டாலின் - கோப்புப் படம்Published On :12 செப்டம்பர் 2026, 7:45 am ISTஉயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு) இடங்களை நிரப்புவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்கும் விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் பொது மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுப்பதால், மதிப்புமிக்க 1,857 உயா் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதில், தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடக்கம். தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்ட தீா்ப்பில், தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரதமா் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டு, முந்தைய ஆண்டுகளில் செய்ததைப் போல பூஜ்ஜிய சதவீத புள்ளிக்கு (ஜீரோ பொ்சன்டைல்) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும். மேலும், இடங்களை நிரப்ப இயலாமல் போகும் நிலையில், பணியில் இருக்கும் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே அவா்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிா்ணயம் செய்யவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். பொது மருத்துவம் என்பது மாநில அரசுகளின் அரசமைப்புக் கடமையாகும். மக்களுக்கு உயா்சிறப்பு மருத்துவா்களுக்கான தேவை பெரிதும் இருக்கும்போது, நம் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்தான மருத்துவப் படிப்புக்கான ஓரிடம் கூட வீணாகக் கூடாது எனப் பதிவிட்டுள்ளாா் மு. க. ஸ்டாலின். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
