1 outlet covered this

இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு

How outlets told it

Daily Thanthi992d ago

இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு

Read at Daily Thanthi
இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு; மல்லை சத்யா அறிவிப்பு
Photo: Daily Thanthi

Published on: 12 Sep 2026, 8:49 am சென்னைஇடைத்தேர்தலில் தி. மு. க. வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று மல்லை சத்யா அறிவித்து உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த. வெ. க. ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். இதில். அ. தி. மு. க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம். எல். ஏ. க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு த. வெ. க. வில் இணைந்தனர். இதனால், காலியாக உள்ள 6 தொகுதிகளில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியான த. வெ. க. மற்றும் தி. மு. க., அ. தி. மு. க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்புஇதில், மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு தி. மு. க. முதல் கட்சியாக 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் தி. மு. க. வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்து உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, த. வெ. க. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது என்று கூறினார்.