Crime and courts · 1 outlet covered this

குளக்கரையில் மருத்துவக் கழிவுகள்: ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

How outlets told it

Dinamani6539h ago

குளக்கரையில் மருத்துவக் கழிவுகள்: ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு

Read at Dinamani
குளக்கரையில் மருத்துவக் கழிவுகள்: ஊராட்சி வாகனம் சிறைபிடிப்பு
Photo: Dinamani

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் குளக்கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து ஊராட்சி வாகனத்தை சனிக்கிழமை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணூடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாகைக்குளம் கரையில் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவக் கழிவுகளை தூய்மை பணியாளா்கள் கொட்டுவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதிவாசிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை குளக்கரைக்கு சென்று மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊராட்சி நிா்வாக குப்பை சேகரிக்கும் வாகனத்தை அவா்கள் சிறைபிடித்து தூய்மை பணியாளா்களை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு வாகனங்களை விடுவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.