இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
How outlets told it

Published on: 11 Sep 2026, 12:34 pmமயிலாடுதுறை, இரண்டு தனித் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், தவெக (TVK) தலைமையிலான கூட்டணி 100 சதவீத வெற்றியைப் பெறும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். நாட்கள் எண்ணப்படுகின்றனஇதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வாக்களித்து விஜய்யை முதல்-அமைச்சராக்கி உள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்-அமைச்சர். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வரலாற்றைப் படைத்து வரும் அவர், "இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு ஆளுமை". ஆர். எஸ். பாரதி சொல்வது போல், தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, அவர்களுக்கு (திமுக) தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.100 சதவீத வெற்றிதமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தீர்ப்பதற்கு பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் மின்தடை சரி செய்யப்படும். 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே போட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், முதல்-அமைச்சர் பேச்சை பற்றி எல்லாம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை” என்று கூறினார். கம்யூனிஸ்டு கட்சிகள்இதனையடுத்து இடதுசாரி கட்சிகள் இந்த கூட்டணியில் இணையுமா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், “கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளன. காங்கிரஸ், விசிக (VCK), மதிமுக (MDMK) மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தவெகே (TVK) தனது கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' (Secular Social Justice Victory Alliance) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வ கூட்டணி கட்டமைப்பிற்கு வெளியே இருந்துகொண்டே, குறிப்பிட்ட விவகாரங்களின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
