World · 1 outlet covered this

சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- எடப்பாடி பழனிசாமி

How outlets told it

Daily Thanthi993d ago

சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- எடப்பாடி பழனிசாமி

Read at Daily Thanthi
சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- எடப்பாடி பழனிசாமி
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 9:25 amசென்னை, சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தனித்துவமான பேச்சாற்றல்தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஈடு செய்ய முடியாத பேரிழப்புதனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.