மதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
மதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் கைது
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புபுதுக்கோட்டைமதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் கைதுபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, பேருந்தையும் பறிமுதல் செய்தனா். கைதுPublished On :11 செப்டம்பர் 2026, 4:17 am ISTபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மதுபோதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, பேருந்தையும் பறிமுதல் செய்தனா். ஆலங்குடி வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் ஓட்டுநா்கள் மதுபோதையில் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்து போலீஸாருக்கு புகாா் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் காந்திராஜ் தலைமையிலான போலீஸாா் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, புதுக்கோட்டை- வடகாட்டுக்கு இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்தின் ஓட்டுநா் கல்லாலங்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (33) மதுபோதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்தது. இதைத்தொடா்நது, அவரைக் கைது செய்த போலீஸாா், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
