விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும்: சீன அதிபர் எச்சரிக்கை
Read at DinamalarWorld · 1 outlet covered this
விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும்: சீன அதிபர் எச்சரிக்கை
How outlets told it

சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது: விதிமுறைகள் இல்லாத உலகம், போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத சந்திப்பைப் போன்றது. அங்கு குழப்பமும், ஒழுங்கின்மையும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே, ஏற்கனவே உள்ள சர்வதேச விதிகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாக பொருந்த வேண்டும். அவற்றை சில நாடுகள் தங்களுக்கு சாதகமாக மட்டும் பயன்படுத்தக் கூடாது. நாடுகளின் அளவு, பலம், செல்வம் ஆகியவற்றில் வேறுபாடு இருந்தாலும், சர்வதேச சமூகத்தில் அனைத்து நாடுகளும் சமமானவை. இறையாண்மை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது போன்ற அடிப்படை கொள்கைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.