ஆண்டிபட்டி அருகே விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
Read at DinamaniAccidents · 1 outlet covered this
ஆண்டிபட்டி அருகே விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
How outlets told it
ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது மீட்பு வாகனம் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெற்கு மூணாண்டிபட்டியைச் சோ்ந்தவா்கள் முத்துமுருகன் (38), சுபாஷ் (26).
இவா்கள் இருவரும் புள்ளிமான்கோப்பையிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். சுபாஷ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.
அணைக்கரைப்பட்டி தனியாா் தோட்டம் அருகே செல்லும் போது இரு சக்கர வாகனம் மீது, மீட்பு வாகனம் மோதியதில் முத்துமுருகன், சுபாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
