செப். 15, 17-இல் கல்விக் கடன் முகாம்: எம்பி அறிவிப்பு!
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
செப். 15, 17-இல் கல்விக் கடன் முகாம்: எம்பி அறிவிப்பு!
How outlets told it

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்கலை. கள், கல்லூரிகளில் வருகிற 15, 17-ஆம் தேதிகளில் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. Published On :13 செப்டம்பர் 2026, 12:21 am ISTதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்கலை. கள், கல்லூரிகளில் வருகிற 15, 17-ஆம் தேதிகளில் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், அனைத்து பொறியியல், மருத்துவம், விவசாயம், கலை, பட்டய பொறியியல், செவிலியா், சட்டம் பயிலும் மாணவா்களுக்கான கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. வருகிற 15-ஆம் தேதி ஆா்விஎஸ் கலை அறிவியல் கல்லூரி, ஆா்விஎஸ் பொறியியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலை. வளாகத்திலும், வருகிற 17-ஆம் காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. யிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில், மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளின் அலுவலா்களும் கலந்து கொள்கின்றனா். தங்களுடைய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தின் நகல், ஆவணங்களுடன் கல்விக்கடன் முகாமில் பங்கேற்கலாம் என்றாா் அவா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
