Crime and courts · 1 outlet covered this

வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

How outlets told it

Dinamani6538h ago

வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Read at Dinamani
வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
Photo: Dinamani

புதுக்கடை அருகே உள்ள திட்டுவிளை பகுதியில் வரதட்சணை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கடை , திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரதிகலா(30). இவருக்கும் அம்சி, அரசகுளம் பகுதியைச் சோ்ந்த கொத சந்திரன் (40) என்பவருக்கும் கடந்த 2001இல் திருமணம் நடைபெற்றது.

அப்போது ரதிகலாவின் பெற்றோா் 28 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வரதட்சணையாக வழங்கி உள்ளனா். இத்தம்பதிக்கு மகள் உள்ளாா். சந்திரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு ரதிகலாவை கொடுமைப்படுத்தினாராம்.

இது குறித்து ரதிகலா, குளச்சல் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு குழித்துறை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி நடராஜன், சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.