1 outlet covered this

சென்னையில் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

How outlets told it

The Hindu Tamil656h ago

சென்னையில் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

Read at The Hindu Tamil
சென்னையில் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது
Photo: The Hindu Tamil

சென்னை: ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் திருப்பதி திருக்​குடை ஊர்​வலம் நேற்று தொடங்​கியது. திரு​மலை திருப்​பதி பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஏழு​மலை​யானுக்கு திருக்​குடைகள் உபய​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை பூக்​கடை சென்ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் 22-ம் ஆண்டு திருக்​குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடை​பெற்​றது.

11 வெண்​பட்​டுக் குடைகளுக்​கும் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்ட பிறகு, திருக்​குடைகள் ஊர்​வலத்தை கர்​நாடக மாநிலம் தீர்த்​தஹள்ளி ஸ்ரீ பீமனக்​கட்டே மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீரகு​வரேந்​திர தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து ஆசி​யுரை வழங்​கி​னார்.

அவர் பேசும்​போது, “200 ஆண்​டாக நடந்து வரும் இந்த உற்​சவம், நடு​வில் சிறிது காலம் நின்​று​விட்​டது. அதற்கு புது வடிவத்தை கோபால்ஜி கொடுத்​துள்​ளார்” என்​றார். ஹிந்து தர்​மார்த்த சமிதி அறங்​காவலர் ஆர்​ஆர்​. கோ​பால்ஜி பேசி​ய​போது, “மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் திரு​விழா​போல, சென்​னை​யில் திருக்​குடை வீதிஉலா நடை​பெறுகிறது.

600-க்​கும் அதி​க​மான இடங்​களில் திருக்​குடைகளுக்கு வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது” என்​றார். இந்த நிகழ்​வில், விஷ்வ ஹிந்து வித்யா கேந்​திரா பொதுச் செய​லா​ளர் கிரிஜா சேஷாத்​திரி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்​நாடு பொருளாளர் சசிக்​கு​மார், இணை பொதுச் செய​லா​ளர் ராமசுப்​பு, ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் அகில பாரத மக்​கள் தொடர்பு இணை பொறுப்​பாளர் சுனில் தேஷ் பாண்டே உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்த ஸ்ரீரகுவரேந்திர தீர்த்த சுவாமிகள், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி.

பின்​னர், என்​எஸ்சி போஸ் சாலை, கோவிந்​தப்ப நாயக்​கன் தெரு சந்​திப்​பு, பைராகி மடம், வால்​டாக்ஸ் சாலை வழி​யாக சென்று திருக்​குடைகள் கவுனி தாண்​டின. வழிநெடு​கிலும் ஏராள​மான பக்​தர்​கள் திரண்​டு, திருக்​குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்​டனர்.

தொடர்ந்​து, பல்​வேறு பகு​தி​களைக் கடந்து செல்​லும் குடைகள் இன்று இரவு வில்​லி​வாக்​கம் சவுமிய தாமோதரப் பெரு​மாள் கோயி​லிலும், நாளை இரவு திரு​முல்​லை ​வா​யில் வெங்​கடேஸ்​வரா பள்​ளி​யிலும் தங்​கு​கின்​றன.

18-ம் தேதி திரு​மலை திருப்​ப​தி​யில் தேவஸ்​தான அதி​காரி​கள் முன்​னிலை​யில்​, ஏழு​மலை​யானுக்​கு திருக்​குடைகள்​ சமர்​ப்​பணம்​ செய்​யப்​பட உள்​ளன.

பெருங்கரணை நடுபழனி கோயிலில் திருடப்பட்ட மரகத தண்டாயுதபாணி சிலை மீட்பு