மஹா.,வில் அதிகாலை விபத்தால் விபரீதம்; லாரி மீது கார் மோதியதில் 8 பேர் பலி
Read at DinamalarAccidents · 1 outlet covered this
மஹா.,வில் அதிகாலை விபத்தால் விபரீதம்; லாரி மீது கார் மோதியதில் 8 பேர் பலி
How outlets told it

/செய்திகள்/இந்தியா/ மஹா., வில் அதிகாலை விபத்தால் விபரீதம்; லாரி மீது கார் மோதியதில் 8 பேர் பலிADDED : செப் 11, 2026 09:23 AM ADDED : செப் 11, 2026 09:23 AM அ நிறம் | அளவுமும்பை: மஹாராஷ்டிராவில் லாரி மீது எஸ்யூவி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று (செப் 11) அதிகாலையில், ஒரு லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இவர்களை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். எச்சரிக்கை அவசியம்! இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.