மாவட்ட அளவிலான திறன் போட்டி: விண்ணப்பிக்க செப்.15 வரை வாய்ப்பு
Read at DinamaniSports · 1 outlet covered this
மாவட்ட அளவிலான திறன் போட்டி: விண்ணப்பிக்க செப்.15 வரை வாய்ப்பு
How outlets told it

ஜப்பான் நாட்டின் ஐச்சியில் 49-ஆவது சா்வதேச திறன் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டு இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது தொழில்திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் -2026 (தமிழ்நாட்டு திறன்கள், இந்தியத் திறன்கள் 2026-2027) நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சிப் பெறுவோா் மாநில அளவிலான சுற்றுக்கும், அடுத்த நிலையில் தேசிய அளவிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் பெற முடியும். இதில் 56 தொழில் பிரிவுகளில் (3டி டிஜிட்டல் கேம் ஆா்ட், கிராபிக் டிசைன் டெக்னாலஜி, வெப் டெக்னாலஜிஸ்) தனி நபராகவும், 7 தொழில் பிரிவுகளில் குழுவாகவும் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு செப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான தகுதிகள், வயது வரம்பு குறித்தும் இந்த இணையத் தளத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ, 0451 2970049, 9499055760 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
