பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்
Read at The Hindu TamilPolitics · 1 outlet covered this
பெங்களூருவின் 50% கழிவு நீர் காவிரியில் கலக்கிறது: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல்
How outlets told it

பெங்களூர: பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவு நீர் காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலப்பதாக, தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மாநகரில் உள்ள கால்வாய்கள் வாயிலாக தினசரி 2,825 எம்எல்டி கழிவு நீர் வெளியேறுகிறது. இதில், 1,364.5 எம்எல்டி கழிவு நீர், 37 சுத்திகரிப்பு மையங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர், சுத்திகரிக்கப்பட்ட நீர் கோலார், சிக்கப்பள்ளாப்பூர், துமக்கூரு ஆகிய அண்டை மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
