’எந்த அணியையும் வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது’ - இலங்கை கேப்டன் நம்பிக்கை
Read at Daily ThanthiSports · 1 outlet covered this
’எந்த அணியையும் வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது’ - இலங்கை கேப்டன் நம்பிக்கை
How outlets told it

Published on: 12 Sep 2026, 7:13 amதுபாய், பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணியிடம், எந்தவொரு எதிரணியையும் வீழ்த்தும் அளவுக்கு திறமையும் மனஉறுதியும் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் சமாரி அதபத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை10-வது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாயில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இலங்கை அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவுடன் மோதல்இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடர்ந்து 2-வது முறையாக பெண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. எந்த அணியையும் வீழ்த்த முடியும்இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இலங்கை கேப்டன் சமாரி அதபத்து கூறியதாவது:“பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பீல்டிங்கில் சில கேட்சுகளை தவறவிட்டாலும், ஒட்டுமொத்தமாக நன்றாகவே செயல்பட்டோம். பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்ல விஷயம். இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால், எந்தவொரு அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்” என்றார்.
