ரூ.5 போதும்... வீட்டில் படிந்திருக்கும் பாசியை ஈஸியா அகற்றிடலாம்... எளிய வழிமுறை இதோ!
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
ரூ.5 போதும்... வீட்டில் படிந்திருக்கும் பாசியை ஈஸியா அகற்றிடலாம்... எளிய வழிமுறை இதோ!
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 12, 2026 4:33 PM ISTபாசியால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், எங்கு பாசி இருக்கிறதோ, அங்கு உங்கள் கால்கள் வழுக்கிவிடும். நீங்கள் எவ்வளவுதான் துடைப்பத்தால் தேய்த்து சுத்தம் செய்தாலும், பாசி மீண்டும் வந்துவிடும். இரசாயனங்களும் பலனளிக்காது. எங்கு பாசி இருக்கிறதோ, அங்கு சமையலறையில் உள்ள இந்த 5 ரூபாய் பொடியைத் தூவுங்கள், உடனடியாக அனைத்து பாசியும் மறைந்துவிடும், மீண்டும் ஒருபோதும் பாசி வராது.1/5மழைநீர் கூரைகள், தோட்டங்கள், முற்றங்கள் மற்றும் படிக்கட்டுகளில் பாசியின் தடித்த அடுக்ககினை உருவாக்குகிறது. இதன் விளைவாக, சுவர்கள் முழுவதும் பெரிய கருப்புப் புள்ளிகள் தோன்றுகின்றன. இந்தப் பூஞ்சை அல்லது பாசி, தனது ஊட்டச்சத்துக்காக சுவரில் உள்ள பொருள்களை பயன்படுத்திக் கொள்கிறது.2/5பாசியால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், எங்கு பாசி இருக்கிறதோ, அங்கு உங்கள் கால்கள் வழுக்கிவிடும். நீங்கள் எவ்வளவுதான் துடைப்பத்தால் தேய்த்து சுத்தம் செய்தாலும், பாசி மீண்டும் வந்துவிடும். இரசாயனங்களும் பலனளிக்காது. எங்கு பாசி இருக்கிறதோ, அங்கு சமையலறையில் உள்ள இந்த 5 ரூபாய் பொடியைத் தூவுங்கள், உடனடியாக அனைத்து பாசியும் மறைந்துவிடும், மீண்டும் ஒருபோதும் பாசி வராது.3/5யூடியூபர் சுனிதா வர்மா தனது யூடியூப் சேனலில் பாசியை அகற்றுவதற்கான ஒரு எளிய ட்ரிக்கை பகிர்ந்துள்ளார். இதற்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே செலவாகும். அந்த ரூ.5 பொருள் என்ன தெரியுமா? சுண்ணாம்பு தான் அந்த எளிய பொருளாகும். இந்த சுண்ணாம்பு பாசிக்கு ஒரு சிறந்த தீர்வாகும். சுண்ணாம்பைத் தடவினால் பாசி நீங்கிவிடும்.4/5பாசிக்கு சுண்ணாம்பு ஏன் ஒரு சிறந்த தீர்வு? பாசி அமிலச் சூழல்களில் நன்றாக வளரும், ஆனால் சுண்ணாம்புப் பொடி காரத்தன்மை கொண்டது. பாசியின் மீது சுண்ணாம்பைத் தூவும்போது, அது பாசி செல்களை அழித்து, பாசியைக் கொன்றுவிடுகிறது. சுண்ணாம்பைப் பயன்படுத்தும்போது, பாசியின் மீது ஒரு படலம் உருவாகிறது, இது ஈரப்பதத்தைத் தக்கவைத்து, பாசி மீண்டும் வளராமல் தடுக்க உதவுகிறது. எனவே, சுண்ணாம்புப் பொடி பாசியை அழிப்பது மட்டுமல்லாமல், அதை நிரந்தரமாக அகற்றவும் செய்கிறது.5/5சுண்ணாம்பைப் பயன்படுத்தும் முறை: வெள்ளைச் சுண்ணாம்பு சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும், எனவே அதைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்புக் கண்ணாடிகள் மற்றும் கையுறைகளை அணியுங்கள். பிறகு, பாசியின் மீது வெள்ளைச் சுண்ணாம்புப் பொடியைத் தூவி, ஒரு தூரிகை(brush) கொண்டு அந்தப் பகுதியை நன்றாகத் தேய்க்கவும். சிறிது நேரத்தில் பாசி உதிரத் தொடங்கும். இறுதியாக, கூரை, சுவர்கள் அல்லது முற்றத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி நன்றாகக் கழுவவும். மீண்டும் ஒருபோதும் பாசி வளராது.
