இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று முடிவு
Read at Daily ThanthiPolitics · 1 outlet covered this
இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று முடிவு
How outlets told it

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்லுக்கு த. வெ. க., தி. மு. க., அ. தி. மு. க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதில் ஆளும் த. வெ. க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம. தி. மு. க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி உள்ளது. இந்த அணியில் உள்ளவர்கள் த. வெ. க. வேட்பாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே நேரம் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்று முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
