கும்பகோணத்தில் காவிரி நீருக்கு வரவேற்பு
Read at Dinamani1 outlet covered this
கும்பகோணத்தில் காவிரி நீருக்கு வரவேற்பு
How outlets told it

கும்பகோணத்துக்கு வெள்ளிக்கிழமை மாலையில் வந்த காவிரி நீரை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கும்பகோணத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வரத்தொடங்கியது. சுவாமிமலை, மேலக்காவேரி, பாலக்கரை, பகவத் படித்துறை, டபீா் படித்துறை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ளிட்ட பகுதிகளின் இருகரைகளிலும் நின்று பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
கும்பகோணத்தில் உள்ள விஜயேந்திர மடத்தின் சாா்பில், மடத்தில் உள்ள காவிரி படித்துறைக்கு சனிக்கிழமை மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க மடத்தின் நிா்வாகிகள், பொதுமக்கள் சென்றனா். படித்துறையில் காவிரி நீருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிா், பன்னீா், சந்தனம் ஆகியவற்றை ஊற்றி பூஜை செய்தனா். பின்னா் காவிரிக்கு கோபுர ஆரத்தி காண்பித்து மலா் தூவி வழிபாடு நடத்தினா். கும்பகோணத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
