Crime and courts · 1 outlet covered this

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் கைது

How outlets told it

Dinamani6538h ago

தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் கைது

Read at Dinamani
தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் கைது
Photo: Dinamani

காவல் துறையின் தடையை மீறி மதுரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 17- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினா் சிம்மம் சத்தியபாமா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 24 -ஆம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓதப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தீா்ப்பளித்தது. ஆனால், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லையாம்.

இந்த நிலையில், நீதிமன்றத் தீா்ப்பின்படி, தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரியும், தமிழில் அா்ச்சனை- குடமுழுக்கு ஆகியவற்றை அனைத்துக் கோயில்களிலும் உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றக் கோரியும் மதுரை பெத்தானியாபுரம் குரு திரையரங்கம் அருகே தெய்வத் தமிழ்ப் பேரவை சாா்பில், கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஆா்ப்பாட்டம் நடத்த தடை விதித்து காவல் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

எனினும், காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு தெய்வத் தமிழ் பேரவை அமைப்பினா் பெத்தானியாபுரம் பகுதியில் சனிக்கிழமை திரண்டனா். இதுபற்றி தகவலறிந்து வந்த திலகா் திடல் போலீஸாா் அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ால் அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.