வேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!
Read at News18 TamilWorld · 1 outlet covered this
வேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeவேலை இழந்தால் இனி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்? டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கை!Published by:Nivetha Jnews18-tamilLast Updated:Sep 11, 2026 10:50 AM ISTஇந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால் தற்காலிக விசாவில் வந்தவர்கள் வேலையிழந்தால், அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.1/5அமெரிக்காவின் எச்-1பி மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடினயாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் டிரம்ப் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.2/5வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி மற்றும் பிற தற்காலிக வேலைக்கான விசாக்களை பெற்று பணிபுரிபவர்கள் வேலை இழந்தால், தற்போதைய விதிகளின்படி 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.3/52017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 60 நாள் சலுகைக் காலம், விசா பெற்றவர்கள் புதிய வேலையைத் தேடவோ அல்லது தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நடைமுறைகளைச் செய்து முடிக்கவோ உதவியாக இருந்தது.4/5சட்டப்பூர்வ குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப் நிர்வாகம், இந்த சலுகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய விதிமுறைகளின் வரைவு அறிக்கை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் பெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.5/5இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், எச்-1பி மட்டுமின்றி, E-1, E-2, L-1, O-1, TN, H-1B1, E-3 ஆகிய தற்காலிக விசாவில் வந்தவர்கள் வேலையிழந்தால், அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
