திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மாணவி தற்கொலை
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மாணவி தற்கொலை
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருப்பத்தூர்திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மாணவி தற்கொலைவாணியம்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். முன்னாள் காதலனும் தற்கொலைக்கு முயன்றாா். தற்கொலை - கோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 11:14 pm ISTவாணியம்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா். முன்னாள் காதலனும் தற்கொலைக்கு முயன்றாா். வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டைஊராட்சி கோடியூா் பகுதியை சோ்ந்த ஸ்ரீதா்ஷினி (20). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தாா். மாணவிக்கு அவரது பெற்றோா் திருமணம் செய்ய முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டாா் தீவிரமாக செய்து வந்தனா். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த மாணவியின் முன்னாள் காதலன் பூவரசன் என்பவா் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவலறிந்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். மேலும், இறப்பதற்கு முன்பு மாணவியிடம் அவரது முன்னாள் காதலன் கைப்பேசியில் மிரட்டிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பூவரசனும் தற்கொலைக்கு முயன்ால் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
