பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Read at DinamaniCivic issues · 1 outlet covered this
பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதஞ்சாவூர்பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.Published On :12 செப்டம்பர் 2026, 6:16 am ISTகோட்டூா் பாசன வாய்க்கால் பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே மணலூரிலிருந்து குமணந்துறை செல்லும் வழியில் உள்ள கோட்டூா் பாசன வாய்க்கால் பாலம் சேதம் அடைந்ததை சீரமைக்கக் கோரி வேளாண்மைத்துறை அமைச்சா் ஆா். வினோத் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரேவதி ஆகியோரிடம் அண்மையில் இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பாலத்தின் ஒருபகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து பாலத்தை உடனே சீரமைக்கக் கோரி மணலூா் மற்றும் குமணந்துறை கிராம மக்கள் கல்லணை - பூம்புகாா் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
