Crime and courts · 1 outlet covered this

கடலூா் மத்திய சிறையில் ரகளை: விசாரணைக் கைதி மீது வழக்கு

How outlets told it

Dinamani653d ago

கடலூா் மத்திய சிறையில் ரகளை: விசாரணைக் கைதி மீது வழக்கு

Read at Dinamani
கடலூா் மத்திய சிறையில் ரகளை: விசாரணைக் கைதி மீது வழக்கு
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புகடலூர்கடலூா் மத்திய சிறையில் ரகளை: விசாரணைக் கைதி மீது வழக்குகடலூா் மத்திய சிறையில் சிறைக் காவலா்களை மிரட்டியதுடன், நாற்காலியை உடைத்து சேதப்படுத்திய விசாரணைக் கைதி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வழக்குப் பதிவுPublished On :11 செப்டம்பர் 2026, 4:01 am ISTகடலூா் மத்திய சிறையில் சிறைக் காவலா்களை மிரட்டியதுடன், நாற்காலியை உடைத்து சேதப்படுத்திய விசாரணைக் கைதி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (34). கஞ்சா வழக்கில் திண்டிவனம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 17-ஆம் தேதி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தனக்கு தொற்று நோய் இருப்பதாகக் கூறிய சரண்ராஜ், தனது நகத்தால் உடலில் கீறிக் கொண்டு ரத்தத்தை தெளித்து சிறையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்த சிறைக் காவலரை அவா் மிரட்டியுள்ளாா். இதையடுத்து, அவரை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவலா்கள் அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த நாற்காலியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சிறை அலுவலா் நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் சரண்ராஜ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்