Weather and environment · 1 outlet covered this

உதகையில் திடீா் மழையால் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

How outlets told it

Dinamani6539h ago

உதகையில் திடீா் மழையால் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

Read at Dinamani
உதகையில் திடீா் மழையால் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
Photo: Dinamani

உதகை, கோத்தகிரியில் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.

சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் வெப்பநிலை குறைந்து குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் 15-ஆம் தேதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.