Crime and courts · 1 outlet covered this

அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஆந்திர மாநில சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

How outlets told it

The Hindu Tamil655h ago

அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஆந்திர மாநில சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

Read at The Hindu Tamil
அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஆந்திர மாநில சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
Photo: The Hindu Tamil

சென்னை: சென்னை திரு​வான்​மியூர் கெனால் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் மங்​கல்​சந்த் (63). இவர் அடை​யாறு இந்​திரா நகர் 17-வது குறுக்​குத் தெரு​வில் நகை அடகுக் கடை நடத்தி வரு​கிறார்.

கடந்த 11-ம் தேதி அதி​காலை மங்​கல்​சந்​தின் அடகுக் கடைக்கு அரு​கில் வசிப்​பவர்​கள், செல்​போன் மூலம் அவரை தொடர்பு கொண்​டு, கடை​யின் பூட்டை யாரோ உடைக்க முயற்சி செய்​வ​தாக தெரி​வித்​தனர்.

இதையடுத்து மங்​கல்​சந்த் கடைக்கு சென்று பார்த்​த​போது, கொள்​ளை​யன் ஒரு​வர் கடை​யின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்று கொண்​டிருந்​தார். உடனே மங்​கல்​சந்த் சத்​தம் போட்​டார். அவரது சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் திரண்டு கொள்​ளை​யனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து திரு​வான்​மியூர் போலீ​ஸில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பிடிபட்​ட​வர் நெல்​லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை கைது செய்​த போலீ​ஸார். ஒரு செல்​போன் மற்​றும் குற்​றச்​செயலுக்​குப் பயன்​படுத்​திய கட்​டிங் மிஷின், சுத்​தி​யல், ஜாக்​கி, டிரில்​லிங் மிஷின், ஸ்குரூ டிரைவர் உள்​ளிட்டவற்றை பறி​முதல் செய்​தனர். இதையடுத்​து அவர்​ சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பணிக்குழு அமைத்தது திமுக