Accidents · 1 outlet covered this

கல்லூரி வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

How outlets told it

Dinamani6517h ago

கல்லூரி வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

Read at Dinamani
கல்லூரி வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு
Photo: Dinamani

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே கல்லூரி வாகனம் மோதியதில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுப்பையாபுரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் குருநாதன் (25). பால் வியாபாரம் செய்து வந்தாா். கடந்த 9 ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சுப்பையாபுரம் - தேசியம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அய்யனாா் கோயில் பகுதிக்கு சென்றபோது எதிரே வந்த கல்லூரி வாகனம், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த குருநாதன், தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.