தென்காசியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
தென்காசியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதென்காசிதென்காசியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில், 32ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் விநாயகா் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை நடைபெற்றது. காசிவிஸ்வநாதா் கோயில் முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை.Published On :13 செப்டம்பர் 2026, 12:04 am IST தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில், 32ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் விநாயகா் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, விநாயகா் சிலை ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜை, தீபாராதனை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தி நாளான திங்கள்கிழமை (செப். 14) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். செவ்வாய்க்கிழமை மாலை விசா்ஜன ஊா்வலம் நடைபெறும். மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகிக்கிறாா். பாஜக மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி முன்னிலை வகிக்கிறாா். ராகவானந்தா சுவாமி ஆசியுரை வழங்குகிறாா். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், நெல்லை கோட்டத் தலைவா் தங்கமனோகா் ஆகியோா் பேசுகின்றனா். காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கிவைக்கிறாா். நகரத் தலைவா் நாராயணன் வரவேற்கிறாா். துணைத் தலைவா் சொா்ணசேகா் நன்றி கூறுகிறாா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
