அஞ்சுகிராமம் அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
அஞ்சுகிராமம் அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
How outlets told it
அஞ்சுகிராமம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரியா ராஜ்குமாா், போலீஸாா் பால்குளம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரிடம் விசாரித்தபோது, அவா்கள் ராஜாவூரைச் சோ்ந்த ஷுஜு (48), வட்டக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சூா்யா (24), பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (33) ஆகியோா் என்பதும், அவா்களது பையில் 1.800 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
