உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரூ.93.28 லட்சம் ரொக்கம் வசூல்
Read at News18 TamilWeather and environment · 1 outlet covered this
உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரூ.93.28 லட்சம் ரொக்கம் வசூல்
How outlets told it

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 5:49 PM ISTமதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் 147 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 775 கிராம் வெள்ளி காணிக்கையாகக் கிடைத்துள்ளன. 1/5மதுரையின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கி வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக கருதப்படும் இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.2/5கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக்கடனாகவும் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். இந்த காணிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு கணக்கிடப்பட்டு வருகிறது.3/5அந்த வகையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், பக்தர்கள் செலுத்திய ரொக்கக் காணிக்கையாக ரூ.93 லட்சத்து 28 ஆயிரத்து 985 கிடைத்துள்ளது. உண்டியல்களில் இருந்த பணம் முழுமையாக எண்ணப்பட்டு கணக்கிடப்பட்டது.4/5இதனுடன் 147 கிராம் தங்கமும், 2 கிலோ 775 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன. பணம் மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் உண்டியல் மூலம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பது கணக்கில் தெரியவந்துள்ளது.5/5திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கையில் கிடைத்த காணிக்கைகள் கோயில் நிர்வாகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ரூ.93 லட்சத்து 28 ஆயிரத்து 985 ரொக்கம், 147 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 775 கிராம் வெள்ளி இடம்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
