மேச்சேரி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு
Read at DinamaniAccidents · 1 outlet covered this
மேச்சேரி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு
How outlets told it

மேச்சேரி அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மேச்சேரி அருகே எறகுண்ட பட்டியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (84), விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் தொப்பூா்- மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
இந்திரா நகா் பிரிவு பாதை அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த லாரியின் ஓட்டுநா் எவ்வித சமிக்ஞையும் செய்யாமல் திடீரென தொப்பூா் நோக்கிச் செல்வதற்காக லாரியைத் திருப்பியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய ஆசைத்தம்பி மீது லாரி மோதியது. பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மகன் விக்கிரமாதித்தன் அளித்த புகாரின் பேரில் மேச்சேரி உதவி காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
