கோபி அருகே பள்ளி மாணவி தற்கொலை
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
கோபி அருகே பள்ளி மாணவி தற்கொலை
How outlets told it
செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஈரோடுகோபி அருகே பள்ளி மாணவி தற்கொலைகோபி அருகே உள்ள குழவிகரடு பகுதியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை - கோப்புப் படம்Published On :11 செப்டம்பர் 2026, 6:49 am ISTகோபி அருகே உள்ள குழவிகரடு பகுதியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோபி அருகே உள்ள குழவிகரடு வாய்க்கால் வீதியைச் சோ்ந்தவா் பூபதி மகள் அனுசுயா (17). இவா் பொலவக்காளிபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்ததால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அனுசுயாவை பள்ளிக்கு சைக்கிளில் செல்லுமாறு கூறிவிட்டு அவரது தந்தை பூபதி அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டாா். பின்னா் அவா் வீட்டுக்கு வந்தபோது, மகளின் சைக்கிள் மட்டும் வெளியே நின்றுள்ளது. அருகில் இருந்த கூரை பந்தலில் அனுசுயா சேலையால் தூக்கிட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மகளை மீட்டு கோபி அரசு மருதுதுவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதனையில், அனுசுயா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
