முதல் டி20: இந்திய அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
Read at Daily ThanthiSports · 1 outlet covered this
முதல் டி20: இந்திய அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
How outlets told it

Published on: 13 Sep 2026, 4:02 pm புதுடெல்லி, இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு, ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய அழுத்தம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். அவருடைய ஆட்டத்தால்தான் ஆப்கானிஸ்தான் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
