Crime and courts · 2 outlets covered this

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

How outlets told it

Dinamani653d ago

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

Read at Dinamani
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருவள்ளூர்போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணிபோதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.Published On :11 செப்டம்பர் 2026, 12:45 am ISTஅரசு ஆண்கள் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது, அதன் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ட. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் காமேஷ், மாவட்ட பசுமைப் படை பொறுப்பாசிரியா் மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலா் ந. லீலா மனோகரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ் பேரணியைத் தொடங்கி வைத்தாா். போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவா்கள் எடுத்துரைத்தனா். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி காந்தி ரோடு, கலைஞா் நகா், பழைய சென்னை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் மாணவா்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தனா். நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படை பொறுப்பாசிரியா் உமாபதி, ஆன்ட்டி ட்ரக் கிளப் பொறுப்பாசிரியா் மோகன் குமாா் உள்பட மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்