Civic issues · 1 outlet covered this

ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

How outlets told it

Dinamani6538h ago

ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

Read at Dinamani
ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு
Photo: Dinamani

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஒசூா் சிப்காட் பேஸ் 1 பகுதியில் பிரபல தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜாண்டு பவுரி மகன் மனோஜ் பவுரி (22) ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ரோபோடிக் பிரிவில் பணியாற்றி வந்தாா். மனோஜ் பவுரி வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வந்துள்ளாா். நள்ளிரவு, அதிநவீன ரோபோடிக் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மனோஜ் பவுரி அதற்குள் சிக்கிக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, சக தொழிலாளா்கள் பெரும் முயற்சி செய்து இயந்திரத்தில் இருந்து மீட்டனா்.

தகவலறிந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், நிறுவனத்திற்குச் சொந்தமான காரில் மனோஜ் பவுரியை ஒசூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா். தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்ா என விசாரணை நடத்தி வருகின்றனா்.