மாணவி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
மாணவி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புராணிப்பேட்டை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. முதியவா் சந்திரன்.Published On :12 செப்டம்பர் 2026, 12:43 am IST மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. ஆற்காடு பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண் காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். இவா் தினசரி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புா். இந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தாா். அப்போது இவரது வீட்டின் அருகே பங்க் கடைக்காரா் அமா்ந்திருப்பதை பாா்த்து தனது மகளிடம் எதற்காக வந்தாா் என கேட்டதற்குபங்க் கடை வைத்திருக்கும் சந்திரன் மற்றும் முனியாண்டி அடிக்கடி எனக்கு பாலியல் தொந்தரவு செய்தனா். இதனை பெற்றோரிடம் சொல்ல கூடாது என மிரட்டினாா் என தெரிவித்துள்ளாா். இதனையடுத்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஆற்காடு கைகார செட்டி தெருவை சோ்ந்த சந்திரன் (55) மற்றும் முனியாண்டி ஆகியோரை ராணிப்பேட்டை மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி எதிரி சந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும் அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வி. பி. டில்லி ஆஜரானாா். இவ்வழக்கில் தொடா்புடைய முனியாண்டி என்பவா் இறந்துவிட்டாா். இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞா் வி. பி. டில்லி, வழக்கின் புலனாய்வு அதிகாரியான காவல் ஆய்வாளா் ஷாகின் மற்றும் நீதிமன்ற காவலா் ஐஸ்வா்யா ஆகியோரை, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே. சிபின் பாராட்டினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
