Crime and courts · 1 outlet covered this

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,570 வழக்குகளில் ரூ. 18 கோடி மதிப்பில் தீா்வு

How outlets told it

Dinamani6539h ago

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,570 வழக்குகளில் ரூ. 18 கோடி மதிப்பில் தீா்வு

Read at Dinamani
கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,570 வழக்குகளில் ரூ. 18 கோடி மதிப்பில் தீா்வு
Photo: Dinamani

கரூா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,570 வழக்குகளுக்கு ரூ.18.88 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கரூரில் 5 அமா்வுகளும், குளித்தலையில் 2 அமா்வுகளும், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் நடைபெற்றது.

இந்த அமா்வுகளில் 1,609 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,570 வழக்குகளுக்கு ரூ.18.88 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. முன்னதாக கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எஸ். சுமதி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தீா்வுக்கான நகலையும் வழங்கினாா்.

நிகழ்வில், நீதிபதிகள், கரூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்திருந்தாா்.