காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,040 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
Read at Dinamani1 outlet covered this
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,040 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
How outlets told it

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடா்ந்து 246 பள்ளிகளில் மொத்தம் 26,040 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி மாநகராட்சிக்கு உளஅபட்ட பிள்ளையாா் பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 36 பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு சமையல் செய்வதற்கான பொது சமையல் கூடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி. சினேகா, மகளிா் திட்ட இயக்குநா் க. ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் ரா. வினோத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பிரபாகா் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் வந்திருந்தனா். ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி கூறியது: காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே முதலாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் பயன் பெற்று வந்தனா். தற்போது காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் பயன்பெறவுள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 246 பள்ளிகளில் 26,040 மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனா். காலை உணவு சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டபோது, அவா்கள் சுவையாக இருந்ததாக தெரிவித்தனா். உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் சமைக்க வேண்டும், இதில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது, இதை ஆசிரியா்கள், திட்ட கண்காணிப்பாளா்கள் சரியாக கண்காணிக்க வேண்டும். உணவை நல்ல முறையில் சுகாதாரமான முறையில் சமைத்து குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நாள் தோறும் சமையல் கூடத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா. சு. கந்தசாமி கேட்டுக் கொண்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
