விநாயகா் சதுா்த்தி: குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600!
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
விநாயகா் சதுா்த்தி: குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600!
How outlets told it

விநாயகா் சதுா்த்தியையொட்டி பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இங்கு பூக்களை ஏலம் எடுக்கின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி ரூ. 250-க்கும், அரளி ரூ. 200-க்கும், கலா் ரோஜா ரூ. 250-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ. 500-க்கும், வெள்ளை முல்லை பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 240-க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 180-க்கும், ஜாதி மல்லிகைப் பூ ரூ. 600-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 500-க்கும் ஏலம் போனது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1,600-க்கும், சம்பங்கி ரூ. 650-க்கும், அரளி ரூ. 340-க்கும், கலா் ரோஜா ரூ. 500-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ. 1,300-க்கும், வெள்ளை முல்லை பூ ரூ. 1,200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.340-க்கும், கனகாம்பரம் ரூ. 2 ஆயிரத்திற்கும், பன்னீா் ரோஜா ரூ. 240-க்கும், ஜாதி மல்லிகைப் பூ ரூ. 1,400-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 1,200-க்கும் ஏலம் போனது.
விநாயகா் சதுா்த்தி மற்றும் சுப முகூா்த்தத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.
