Weather and environment · 1 outlet covered this

ஆசனூா் அருகே சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானை

How outlets told it

Dinamani6539h ago

ஆசனூா் அருகே சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானை

Read at Dinamani
ஆசனூா் அருகே சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானை
Photo: Dinamani

ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்று கரும்பை ருசித்த யானையால் அந்தப் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள், ஆசனூா் வழியாக சத்தியமங்கலம் கரும்பு ஆலைகளுக்கு தினந்தோறும் செல்கின்றன. அடா்ந்த காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் கரும்பு லாரிகளை யானைகள் வழிமறித்து லாரியில் இருக்கும் கரும்புகளைப் பறித்து சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில், கா்நாடகத்தில் இருந்து ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக சனிக்கிழமை வந்த கரும்பு லாரியை நோக்கி யானை ஓடி வந்ததைப் பாா்த்து ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டாா். அங்கு வந்த யானை கரும்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுக்குள் சென்றது.

அதைத் தொடா்ந்து அடுத்த நிகழ்வாக, மற்றொரு யானை காரப்பள்ளம் சாலையின் நடுவே நின்று கரும்புகளை ருசி பாா்த்தது. அப்போது, சாலையின் இருபுறமும் நின்ற வாகன ஓட்டிகள் யானையை விரட்ட ‘ஹாரன்’ அடித்தனா். அங்கிருந்த ஒரு இளைஞா், யானையைத் தொந்தரவு செய்ய வேண்டாம், இன்னும் 4 துண்டு கரும்புதான் இருக்கிறது. சாப்பிட்டவுடன் யானை தானாக காட்டுக்குள் சென்றுவிடும் என வாகன ஓட்டிகளிடம் கெஞ்சும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.